WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 29, 2026

பகுதிநேர ஆசிரியர்கள் கேட்டது பணி நிரந்தரம்; கிடைத்தது தேர்தல் பணியில் முன்னுரிமை.

 

பணி நிரந்தரம் கேட்டு, 15 ஆண்டுகளாக போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, தற்போது தேர்தல் பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில், 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 2012ல் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளை பகுதிநேர ஆசிரியர்களாகவே கடந்து வந்துள்ள இவர்கள், தங்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இது வரை கல்வித்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு, 'பி1' என, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது 'பி2' அல்லது 'பி3' நிலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

நிரந்தர ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள் மட்டுமே, இது வரை, 'பி1' நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு, 'பி1' நிலை தேர்தல் அலுவலராக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, இது வரையில் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர எந்தவித சிறப்பு சலுகையும் கிடையாது. மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு என, எந்த விடுப்பும் கிடையாது. மாதத்தில் 12 அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும். இதில் பணி நாட்கள் குறைந்தால், அதற்கேற்ப சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

பண்டிகை முன் பணம் கிடையாது, தீபாவளி போனஸ் கிடையாது. இது வரையில் மே மாதத்திற்கு சம்பளமும் வழங்கப்பட்டது இல்லை.

பெயரளவில் அரசு பணியில் உள்ளோம் என்பதால், இந்த பணியை விட்டு செல்லவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும், பகுதிநேர ஆசிரியர்கள், 'நாங்கள் கேட்ட நிரந்தர பணியை வழங்காத அதிகாரிகள், தற்போது தேர்தல் பணியில் மட்டும் எங்களை முன்னிலை படுத்தியுள்ளது எங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தாது' என, புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.