பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஜூலை 1 முதல் 2026-27 கல்வியாண்டில் அனைத்து சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக 3 மொழிகளை கற்க வேண்டும். அவற்றில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு மொழியை கற்க விரும்புவோர் தாங்கள் கற்கும் மற்ற இரு மொழிகளும் தாய்மொழிகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதனை மூன்றாவது மொழியாகவோ அல்லது கூடுதலாக நான்காவது மெழியாகவோ கற்கலாம். 3வது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது.
3வது மொழிக்கான தேர்வுகள், அதனை திருத்தும் பணிகள் அந்தந்த பள்ளிகளே திட்டமிட்டு நடத்திக் கொள்ளலாம். இது பற்றிய மேலும் விவரங்களை www.cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.