WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 6, 2026

100% வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிவில் பொறியியல் படிப்புகள்!

 

என்ன படித்தால் வேலை கிடைக்கும்? என்ன படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று மாணவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 100 சதவிகித வேலை வாய்ப்பை உறுதி செய்த நான்கு முதுநிலை படிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025 - 2026ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்த மாணவர்களில் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் எந்தெந்த படிப்புகளை நிறைவு செய்தவர்கள் என்பது குறித்துத் தேடியபோது கிடைத்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கலாம்.

காரணம், செய்யறிவு, கணினி அறிவியல் படித்தவர்களோ இல்லை. சிவில் என்ஜினியரிங், ஸ்டிரக்சுரல் என்ஜினியரிங், கன்ஸ்டிரக்ஷ்ன் பொறியியல், என்விரான்மென்டல் பொறியியல், என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் முதுகலை படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் வேலை வாய்ப்புடன் வெளியேறியிருக்கிறார்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையிலான ஊதியத்துடன் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

எல் அன்ட் டி போன்ற முன்னணி கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அடிப்படை பொறியியல் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

தற்போது முன்னணி நிறுவனங்களுடன் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. இன்டர்ன்ஷிப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு பேருதவி செய்கின்றன.

இதுபோன்றே இந்த ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதிலும், 40 சதவிகித மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். 5 சதவிகிதம் பேர் சொந்த தொழில் தொடங்குகிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில் சிவில் என்ஜினியரிங் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில், செய்யறிவு, புதிய தொழில்நுட்பங்கள், பாடங்களை விரிப்படுத்தி, மேம்படுத்த பல்வேறு கல்லூரிகளும் திட்டமிட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.