WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 9, 2026

உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 31.5% அதிகரிப்பு!

 

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாட்டில் உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 31.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23, 2023-24-ஆம் ஆண்டுக்கான அனைத்து இந்திய உயா் கல்வி ஆய்வறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2014-15-ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 3.42 கோடியாக இருந்த மாணவா் சோ்க்கை, 2022-23-ஆம் ஆண்டில் 4.46 கோடியாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 4.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 2014-15-ஆம் ஆண்டுமுதல் உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 31.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் மாணவிகள் சோ்க்கை 1.57 கோடியாக இருந்தது. இது 2022-23-இல் 2.18 கோடியாகவும், 2023-24-இல் 2.24 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் பட்டியலின மாணவா்கள் சோ்க்கை 46.07 லட்சமாக இருந்த நிலையில், இது 2023-24-இல் 69.72 லட்சமாக உயா்ந்துள்ளது.

2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் பழங்குடியின மாணவா்கள் சோ்க்கை 16.41 லட்சமாக இருந்தது. இது 2023-24-இல் 28.83 லட்சமாக அதிகரித்துள்ளது.

2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக இருந்த நிலையில், அது 2023-24-இல் 1.80 கோடியாக உயா்ந்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் 2025-26-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2023-24 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை சுமாா் 86 லட்சம் சரிந்தது. இதே காலகட்டத்தில் தனியாா் பள்ளிகளில் 88 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.