ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
கவன ஈர்ப்பு
சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
துணை தகுதித்தேர்வு
அரசாணை நிலை எண் 181, நாள் 15-11-2011-ன்படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்தும் முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 12-7-2012 அன்று தகுதித்தேர்வை நடத்தியது, இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 448 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 0.34 சதவீதம் ஆகும்.
தேர்ச்சி விகிதம் மிக குறைந்த அளவே இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் 14-10-2012 அன்று துணைத் தகுதித்தேர்வினை நடத்தியது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதியதில், 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2.99 சதவீதம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
5 சதவீதம் குறைப்பு
2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வினை நடத்தியது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர்களில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 4 லட்சத்து 311 பேரில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை நிலை எண் 25, பள்ளி கல்வித்துறை நாள் 6-2-2014-ல், 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முகமதியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இச்சலுகையினால் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் ஒன்றில், 17 ஆயிரத்து 996 பேர்களும், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர்களும் ஆக மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேர்களுடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 183 பேர்கள் ஆக மொத்தம் 72 ஆயிரத்து 701 பேர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என பணிநாடுநர்களால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
தொடர் நடவடிக்கை
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தொடர்ந்து பேசிய உறுப்பினர் பாலபாரதி, ‘‘முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்த பிறகு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2-வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
எவ்வளவு காலியிடம்?
அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றார்.
இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்றார்.
ayya when will publish pg final list........anybody know the expected date pls post here.........
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇன்று அல்லது நாளை பீஜீ இறுதிப்பட்டியல் வெளியிடலாம் என்று ஒரு தகவல்.
ReplyDeleteசெல்வா சார்...
Deleteபள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை விளக்க குறிப்பேட்டில்
இடைநிலை ஆசிரியர்கள் 938
பட்டதாரி ஆசிரியர்கள் 13,777
மொத்தம் 14,715 வருது.
அப்ப நமக்கெல்லாம் (PGT)Function இல்ல தானே...
இதே போல தான் எங்களுக்கும் சொன்னங்களே(ஒருவாரத்திற்குள்PGT முடிவுகள் வெளியிடப்படும்)
ReplyDeleteநல்லவேல PGT க்கு ஏற்கனவே Function (தமிழாசிரியர் நியமனம்) முடச்சிடிங்க.
நீங்க டி.இ.டிக்கு Function நடத்துங்க இல்ல நடத்தாம போங்க
எங்களுக்கு(PGT க்கு) சீக்கிரம் போஸ்டிங் போட்டே ஆகனும் ...
ReplyDelete934 SPECIAL TET 2014 CANDIDATES SINCERE PRAYERS TO TN GOVT:
ALL 934 SPL TET 2014 CANDIDATES PRAY TN GOVT TO APPOINT - 'ALL SPL TET PASSED PWD CANDIDATES' VIA EXISTING 1107 BACKLOG PH VACANCIES IN TRB FROM 2007.
ONLY 670 PH ORTHO & 264 VISUAL IMPAIRED CANDIDATES ARE PASSED IN SPL TET 2014.
Honourable supreme court & chennai hc intimated tn govt to confirm 3% reservation & fill the backlog vacancies of 3% reserved PH posts immediately & appoint an nodal officer to collect all dept wise ph vacancies within 3 months from 2007 to upto now.
So TN GOVT collected all dept wise PH vacancy & passed G.O to recruit & fill the existing ph vacancy frm 2007-2013.
(TN GOVT SOCIAL WELFARE DEPT
G.O NO: 10 DATED: 04.03.2014)
TOTAL EXISTING BACKLOG VACANCIES OF PH FROM 2007 IN ALL TN GOVT DEPT:
HIGHER EDN : 91
TRB: 777 + 330=1107
MEDICAL : 79
TNPSC: 0
SOCIAL WELFARE: 259
DAIRY FISHERY: 57
ENERGY:20
HIGHWAY:4
ADIDRAVIDAR WELFARE::171
WATER SUPPLY:140
TOTAL:1928
In TRB alone
777 + 330=1107 PH BACKLOG VACANCIES are existing frm 2007.
In that,
777 posts belongs to B GRADE(BT & PG) GOVT JOB
330 posts belongs to C GRADE(SECOND GRADE TCHR) GOVT JOB
SO WE REQUEST OUR TN GOVT TO ORDER TRB TO PUBLISH 'SEPARATE SPL TET NOTIFICATION FROM EXISTING 1107 PH VACANCIES.' (splitting 1107 vacancies for PG & BT + SGT - subjectwise & community wise for both Paper 1 & 2)
AT PRESENT,
OUT OF PASSED 670 PH ORTHO CANDIDATES MORE THAN 60% CANDIDATES HAVE JOB OPPORTUNITY.
OUT OF 264 PASSED VISUALLY IMPAIRED CANDIDATES 100% CANDIDATES WIL HAV JOB OPPORTUNITY.
BUT OUR KIND REPRESENTATION IS TO "APPOINT THE MAXIMUM NO OF PH CANDIDATES UNDER HUMANITARIAN CONDITION & AS PER RESERVATION RULE".
Many representation are made by PH ORTHO & VISUALLY IMPAIRED ASSOCIATIONS & individual candidates for last few months to our TN GOVT via
CM CELL, SOCIAL WELFARE DEPT & SCHL EDN SECRETARY to our honourable CM - 'to appoint - all the passed 934 PH & VISUAL CANDIDATES' under humanitarian condition.
We all hope the Best decision from tn govt soon.
Sincere thanks from depth of the broken hearts of all SPL TET 2014 PASSED PWD candidates to our respected TN GOVT for conducting spl recruitment & providing appointment under humanatarian condition.
Thanks for all participating in bringing attention about this spl tet maximum appointment issue to tn govt.
- ON THE BEHALF OF ALL DIFFERENTLY
ABLED (PH & VISUAL) CANDIDATES.
Tet candts wrote exam only after us. But all steps has being taken for tet appt but what is the status of pg. It is ????????
ReplyDeleteன விபரம் ...
ReplyDeleteமானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
SG T =938
BT= 13,777
PG T=2881
SPECIAL T =842
LECTURER =1093
so the vacancy will be increase around 3000 in BT assistant
ஆசிரியர்கள் நியமன விபரம் ... பள்ளிக்கல்வித்துறை:மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
ReplyDeleteமானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
SG T =938
BT= 13,777
PG T=2881
SPECIAL T =842
LECTURER =1093
so the vacancy will be increase around 3000 in BT assistant
minister-kku mental akivittathu because last week told 18000 posting wii fillup soon but yesterday told in assembly 15000 posting fill up with in 2 or 3 weeks what happens .athuvarai minister posting il irruppara
ReplyDeletes.........................
DeleteEVERYTHING IS PROBLEM !!!
DeleteIf amma's style is followed, seniors are affected much.what to do???
EVERYTHING IS PROBLEM !!!
If karunanithi's style is followed, we get the job at the age of 55 years. Because 4,00,000 B.Ed are waiting.......
EVERYTHING IS PROBLEM !!!
If seniority weightage is given, seniors only be getting job, juniors will get less chance !!!
EVERYTHING IS PROBLEM !!!
Even though U.G TRB is intoduced , competition is so high. Because, 4,00,000 b.ed students are there in Tamil nadu. Every year 65,000 fresh b.ed candidates are coming out.
Hi sir
ReplyDelete