WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 26, 2014

அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சிநேற்று வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு பொதுபணியில் அடங்கிய  உதவி அரசு வழக்குரைஞர் நிலை2 பதவிக்கான 90  காலிப்பணியிடத்திற்கான நேரடி நியமனத்திற்காக எழுத்துத் தேர்வு ஏப்ரல்  27, 28ம் தேதிகளில் நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற  மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான  அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்  நேர்காணல் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 128 விண்ணப்பதாரர்  பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளம்   www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டது.


நேர்காணல் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு  அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மற்றும்  மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 128  விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஜூலை  30, 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும். இது குறித்த தகவலை தேர்வாணைய இணையதளம்  www.tnpsc.gov.in பார்த்து   தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.