நாகர்கோவில், ஜூலை.
11– நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன்.
தேர்வில் இவருக்கு 491 மதிப்பெண் கிடைத்தது. பாடவாரியாக
தமிழ்–98,
ஆங்கிலம்–100,
கணிதம்–100,
அறிவியல்–100,
சமூக அறிவியல்–93 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
தமிழ்–98,
ஆங்கிலம்–100,
கணிதம்–100,
அறிவியல்–100,
சமூக அறிவியல்–93 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, சமூக அறிவியல் பாடத்தில் எனக்கு நிச்சயம் 100 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன், ஆனால் 93 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.
எனவே அந்த பாடத்தின் விடைத்தாளை மறு கூட்டல் செய்ய வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என பெற்றோரிடம் கூறினார்.
எனவே அந்த பாடத்தின் விடைத்தாளை மறு கூட்டல் செய்ய வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என பெற்றோரிடம் கூறினார்.
மகளின் நம்பிக்கையை பார்த்து பெற்றோரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக கவுசல்யாவின் சமூக அறிவியல் பாட விடைத்தாளை மட்டும் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.
இதற்கான முடிவு இன்றுதான் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வெளியானது. இதில் கவுசல்யாவின் நம்பிக்கை வீண்போகவில்லை.
அவர் கூறியபடியே இந்த பாடத்திலும் அவருக்கு 100 மதிப்பெண் கிடைத்தது. ஏற்கனவே போடப்பட்ட 93 மதிப்பெண்ணில் இருந்து கூடுதலாக 7 மதிப்பெண் அதிகம் பெற்று அவர் 100 மதிப்பெண் பெற்றார்.
இதன் மூலம் கவுசல்யாவின் மொத்த மதிப்பெண் 491–ல் இருந்து 498 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கவுசல்யாவுக்கு குமரி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்த சாதனையை படைத்த மாணவ–மாணவிகள் அனைவரும் பாராட்டப்பட்டுவிட்டனர்.
தற்போது மறுகூட்டல் மூலம் இந்த சாதனையை எட்டிபிடித்து உள்ள மாணவி கவுசல்யாவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பாராட்டி உள்ளார்.
அவர் மூலம் மாநில அளவிலும் கவுசல்யாவின் சாதனைக்கு பாராட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.