WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 30, 2014

உடற்கல்வி ஆசிரியர்கள் பேரணி நடத்த முடிவு

உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: 

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆசிரியர்களுக்கு, ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இதுவரை உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மேற்கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை கோட்டையில், ஆகஸ்டு, 6ம் தேதி, 4,000 உடற்கல்வி ஆசிரியர்கள் பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர். மாநில தலைவர் செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் ராமர், மாநில பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.