WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 5, 2014

கல்லூரிகளை ஆக.6-ல் திறக்க பல்கலைக்கழகம் சுற்றறிக்கை: குழப்பத்தில் கல்வியியல் கல்லூரிகள்

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை வரும் 6-ஆம் தேதி திறக்க வேண்டும் என்ற
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

வழக்கமாக கலந்தாய்வு முடிந்த பிறகே கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்படும். மேலும், இதுதொடர்பான சுற்றறிக்கையை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிடுவதுதான் நடைமுறை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 2,155 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 1-8-2014 அன்று கல்வியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியது:

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் திறக்கப்பட வேண்டிய தேதி, மூடப்பட வேண்டிய தேதிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பது நடைமுறை. இதுபோல், கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டிய தேதி. மூடப்பட வேண்டிய தேதிகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பதுதான் நடைமுறை. 

பல்கலைக்கழகங்கள் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி, கலந்தாய்வு முடியும் தேதியை அந்தந்த இயக்குநர் அலுவலகங்களுக்கு தெரிவிக்கும். அதனடிப்படையில், கல்லூரிகள் திறக்க வேண்டிய தேதியை இயக்குநர் அலுவலகங்கள் நிர்ணயிக்கும். குறிப்பாக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை, பி.எட். கலந்தாய்வு முடிந்து அடுத்த 7-வது நாளில் கல்லூரிகள் திறக்கப்படுவதுதான் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திறக்க வேண்டும் என இப்போது புதிதாக சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடத் திட்டங்களை வகுப்பது, தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிப்பது, கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்த்து வழங்குவது, இணைப்பு நீட்டிப்பு வழங்குவது ஆகியவைதான் பல்கலைக்கழகத்தின் பணி. ஆனால், கல்லூரி இயக்குநர் அலுவலகத்தின் பணிகளையும் பல்கலைக்கழகம் எடுத்துக்கொள்வது, பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.