WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 11, 2014

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

"ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து, பழைய முறையை பின்பற்ற
வேண்டும். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்' என, மர்ம நபர் எழுதிய கடிதம், கொல்லிமலை அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு வந்துள்ளது. இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாட்டில், அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மலைவாழ் இனத்தை சேர்ந்த, 515க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியராக, கலைவாணி உள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு போஸ்ட்மேன், ஸ்டாம்ப் ஒட்டாத தபால் ஒன்றை, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணியிடம் கொடுத்துச் சென்றார். அந்த கவரை பிரித்து படித்த அவர், கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் தகுதித்தேர்வை (டிஇடி) ரத்து செய்து விட்டு, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், பள்ளி கட்டிடம், ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள், சேந்தமங்கலம் தொகுதி அனைத்து கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், வீடுகளில் வெடிகுண்டு வெடிக்கும். சேந்தமங்கமலம் தீவிரவாதமா? ஆசிரியர் என்றால், தி.மு.க., அரசியல் என்றால் அ.தி.மு.க., டெட் தேர்வில் எஸ்.டி., எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்.டி.,க்கென ஒரு சீட் கூட இல்லை. எனவே, பழைய தேர்வு முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. கையெழுத்து சரியில்லாமலும், அதிக எழுத்துப் பிழையுடனும் மூன்று பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி, வாழவந்திநாடு போலீஸில் புகார் செய்தார். வாழவந்திநாடு போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.