இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல்
வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலாண்டுத்தேர்வு
விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்.,7ல் துவங்குகின்றன. 1 முதல்
9ம்வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அன்றைய தினமே இரண்டாம் பருவ
பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழ்நாடு பாடநூல்
கழகத்தில் இருந்து ஏற்கனவே இரண்டாம் பருவத்திற்கான இலவச பாடப்புத்தகங்கள்
மற்றும் நோட்டுக்கள், சீருடைகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை
அங்கிருந்து பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அவற்றை அக்.,7ல் அனைத்து
மாணவர்களுக்கும் வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அப்பணிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்
கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.