பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கு தனித்தனியாக ரு.ஒரு கோடி பத்திரத்துக்கான உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களை பிணையில் விடுவித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி குன்கா உத்தரவிட்டார். பின்னர் இந்த உத்தரவின் நகல் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அதிமுக பிரமுகர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கொண்டுசென்றனர். தற்போது இந்த உத்தரவு நகல் தற்போது சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறையை விட்டு தற்போது வெளியே வந்த ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கார் மூலமாக விமானநிலையம் செல்லும் அவர் சில மணி நேரத்தில் சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.