WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 17, 2014

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்ஸில்...

காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ  இந்தியா
அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள 509 Administrative Officers (AO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer (Scale-I) காலியிடங்களின் எண்ணிக்கை: 509 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Finance - 65 தகுதி: Chartered Accountant (ICAI), Cost Accountant (ICWA)/ MBA நிதியியல், B.Com, M.Com முடித்திருக்க வேண்டும்.
2. Engineering - 25 தகுதி: Civil/ Mechanical /Electrical/ Electronics & Communication துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
3. Legal - 40 தகுதி:  சட்டத்துரையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Automobile Engineering - 30 தகுதி: Automobile துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
5. Generalist - 349 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளம்: மாதம் ரூ.36,000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி, எஸ்.டி, பொதுப்பணித்துறை, பெண்களுக்கு ரூ.50. இதனை Debit Cards/Credit cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 10.01.2015 மற்றும் 11.01.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://newindia.co.in/downloads/Detailedadvertisementtobepublishedonwebsiteon10-10-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.