WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 17, 2014

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள
இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ள உத்தரவில்,' பள்ளிகளில் இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் நிரப்பட்ட பணியிடங்கள் போக மீதமுள்ள, இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு, தகுதியானோர் விபரங்களை, வேலைவாய்ப்பகம் மூலம் பெற்று, கல்வித்துறை அதிகாரிகளை கொண்ட குழு, நேர்காணல் நடத்தி, நவம்பர் 15ம் தேதிக்குள், இப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.