WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 14, 2014

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்

அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பேராசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் நிரப்பியாக வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பல பல்கலைக்கழகங்களில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், இவற்றில் சில அந்தக் காலியிடங்களில் பகுதி நேர அடிப்படையில் தாற்காலிகப் பேராசிரியர்கள் நியமித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், தாங்கள் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை என்பதால் ஒதுக்கப்பட்ட பாடத்தை மட்டும் நடத்திவிட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொள்வர். துறை ரீதியாக தங்களைத் தாங்களே சுய மேம்பாடு செய்துகொள்வதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் சற்றும் தாமதிக்காமல் பத்திரிகை விளம்பரம் முலமும், பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவும் விளம்பரப்படுத்தி காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உரிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதிவாய்ந்த முழுநேரப் பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.