மதுரை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே எழுத
அனுமதிக்க வேண்டும் என மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்வை மற்ற பள்ளியில் சென்று எழுதுவதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்வு எழுதச் செல்லும் போது விபத்தில் சிக்கி மாணவர் உயிரிழக்கின்றனர். மாணவர் உயிரிழப்பை தடுக்க அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தனபாலன், வேலுமணி அமர்வு விசாரித்தது மேலும் இந்த மனுவை தனி நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.