WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 9, 2014

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத
விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தங்கள் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனித்தேர்வர்களும், 8-வது வகுப்பு தேர்வில் தேர்ச்சியுற்ற தனித்தேர்வர்களும் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் மாதம் எழுத விரும்பினால் 12-12-2014 (வெள்ளிக்கிழமை) வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் தங்களது பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெறலாம். செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்குரிய பள்ளிகளின் விவரங்களை அரசுத்தேர்வுகள் சேவை மையங்களை அணுகி தெரிந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.