WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 7, 2015

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்டம், பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 7 சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்கள் இன சுழற்சிமுறையில் நிரப்பப்படவுள்ளன.

விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றிதழின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றின் நகல்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகவரிக்கு ஜன. 20-ம் பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும், பொது போட்டி (பொது), ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை- ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் - பொது, 

பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) பொது, ஆதிதிராவிடர் - பொது ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும்

பொது போட்டி (ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை பெண்கள்) ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை அற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.