மதிய உணவு சாப்பிடும் முன் மாணவர்கள் கை கழுவுகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு மத்திய மனித வளத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை
மதிய உணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழுவாமல், உணவு அருந்துவதால், கைகளில் பரவியுள்ள கிருமிகளால் உடல் நலம் பாதிக்கிறது.
ஆரோக்கியத்தை பேணும் வகையில், மாணவர்களை கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். பெற்றோருக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சூடான உணவு வகைகளை பரிமாற வேண்டும். பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட மளிகை பொருட்களையே, உணவு தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.
சமையல் கூடங்களும், தூய்மையான முறையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.