WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 6, 2015

வனச்சீருடை பணியாளர் தேர்வுக்கு இணையத்தில் நுழைவு சீட்டு

''தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனக்கழகங்களில் காலியாக உள்ள 200 வனச்சீருடை பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,22ல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை வனத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என தேர்வு குழு தலைவர் இருளாண்டி தெரிவித்தார்.

மதுரையில் வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் இருளாண்டி கூறியதாவது: வனச்சீருடை பணியாளர்களுக்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 30 சதவீதம் பெண்களுக்கும், 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) வெளியிடப்படும் தேர்வுக்கான நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் வனத்துறை, அரசு ரப்பர் தோட்டம் போன்ற இடங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.