முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்
நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாளை (28ம் தேதி) நடக்கிறது. தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 789 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் நாளை (28ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடக்க உள்ளது.
ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வரிசை எண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படும். காலை 10 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும். தகுதியுள்ள ஆசிரியர்கள் காலை 9.30 மணிக்கு வர வேண்டும். முத லில் மாவட்ட அளவிலான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும். தொடர்ந்து பிற மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வின் போது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சி சான்று, அசல் கல்விச்சான்று, இதர சான்றுகளை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்தவுடன் பணி நியமன உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.