WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 19, 2015

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்.

மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்
தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், தொடக்கக்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்பு, இரண்டாண்டு கல்வியாக வழங்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை, தனித்தேர்வராக, அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கல்வியாண்டில், மே, 18ம் தேதி, ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் துவங்குகின்றன. இதில், பங்கேற்கும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, கடந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைத்து, உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அணுக வேண்டும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வெப்கேமரா மூலம், ஃபோட்டோ எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், ஃபோட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை, அங்கேயே, தனித்தேர்வர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். தேர்வுக்கட்டணத்தையும், அங்கேயே செலுத்திக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல், 22ம் தேதி, மாலை, 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.