வெளியாக உள்ள பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்த பயத்துக்கு ஆலோசனை
பெறுவதற்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி(வியாழக்கிழமை) வெளியாக உள்ளன.
தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம் மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசின் தொலைபேசி சேவையை அழைக்கலாம். தேர்வு முடிவுகள் குறித்த உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 25 பேர் கொண்ட குழுவினர் நியமக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் மூன்று பிரிவுகளாக இந்த மையம் செயல்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இது குறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியது:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், அதனைத் தொடர்ந்து மே 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. எனவே மே மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ஆலோசனை குழு செயல்படும்.
தேர்வுக்கு முன்பு, தேர்வு சமயம் சுமார் 8 ஆயிரம் பேர் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.