WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 25, 2015

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் 22-ம் தேதி சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 18-ம் தேதியுடன் விண்ணப்பம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, இன்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு 29-ம் தேதிக்குள் முடிகிறது. அரசு கல்லூரியை பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர்.ஜூன் 1-ம் தேதி, கல்லூரி தொடங்கப்படும் என்பதால், சிறப்பு உடனடி தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றாலும், அரசு கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது.கடந்த ஆண்டுகளில், ஜூன் 20-ம் தேதிக்கு பிறகே கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூலையில் வகுப்பு ஆரம்பித்தது.சிறப்பு உடனடி தேர்வு எழுதியோர், சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தோர் அரசு கல்லூரிகளில் சேரமுடிந்தது. இந்த ஆண்டு, 29-ம் தேதியுடன் முடிவதை தொடர்ந்து, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும்.பேராசிரியர் ஒருவர் கூறும்போது: அரசு கலை கல்லூரிகளில் முன்கூட்டியே கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கும் கல்லூரிகளில் மூவாயிரம் விண்ணப்பங்களே விற்பனையாகியுள்ளன. கிராமப்புற, ஏழை மாணவர்களின் முதல் தேர்வு அரசு கல்லூரிகள் தான். இம்மாணவர்கள் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.