சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
இளங்கலை சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ம் தேதி விநியோகிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகத்தில் ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணங்களால் சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தாற்காலிமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், வெளியூரில் இருந்து சென்னை வந்த ஏராளமான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால் விண்ணப்பக் கட்டணத்துக்கான செல்லான் மட்டும் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 2 நாட்களில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.