WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 12, 2015

மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு.

மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள்
லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு புதுடில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன வழக்கில், வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. தேசிய முதல்நிலை மருத்துவ நுழைவு தேர்வு சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் 10 மாநிலங்களில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றில் வெளியானது. இதனையடுத்து இந்த தேர்வை ரத்து செய்யக்கோரியும், மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, வரும் 15ம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதுவரை தேர்வு முடிவை வெளியிடவும் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.