ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை,
உடனே நடத்த வேண்டும்' என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூடலுாரில் நடந்தது. செயலர் முருகேசன் வரவேற்றார். தேர்தல் ஆணையாளர் சத்தியநேசன் முன்னிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிவா, செயலாளராக முருகேசன், பொருளாளராக உமாசங்கர், மகளிர் அணி செயலர் ஆக நிர்மலாதேவி, துணை தலைவர் ஆக பிரசாத், துணை செயலர் ஆக முகமது அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூடலுார் வட்டார தலைவராக செல்வநாயகம், செயலர் மதியழகன், பொருளாளர் நிலேஷ், மகளிர் அணி செயலர் சப்ன ப்ரீத்தா, துணைத் தலைவர் யசோதா, துணை செயலர் மல்லேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை தீர்க்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.