WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 29, 2015

சிறப்பு பயிற்றுனர்கள் உண்ணாவிரதம்.

சிறப்பு பயிற்று னர்களை, அரசு ஆசிரியர் களாக அறிவித்து பணி நியமனம்
செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக உள்ளடங்கிய கல்வி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேர பாதுகாப்பு மைய ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பயிற்றுனர்கள் சார்பில், பணிபாதுகாப்பு இன்மை, பணிச்சுமை போன்ற காரணங்களால் போராட்டம் அறிவிக்கப்பட்டது.பணி நிரந்தரம் செய்தல், மகப்பேறு விடுப்பு, அதிக பணிசுமையை குறைத்தல் உள்ளிட்ட ஆறு வகையான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.மாநில தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.