தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள
ஆயிரத்து 241 இடங்களுக்காக சுமார் 6 லட்சத்து 20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சார்பதிவாளர் கிரேடு 2, ஜூனியர் எம்பிளாய்மெண்ட் அதிகாரி, லோக்கல் பணட் ஆடிட் டிபார்ட்மெண்ட் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 114 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் நடைபெறும் இத் தேர்வில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் 3 மாத காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் அதற்கு முன்னதாக விடைகள் டி.என்.பிசி இணைய தளத்தில் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.சி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.