மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே துறையில் - 724 பணியிடங்கள்:
* வடக்கு மத்திய ரயில்வேயில் - 109 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 31.08.2015 மேலும் விவரங்களுக்குhttp://www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* சென்னை மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பணி. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015 மேலும் விவரங்களுக்கு http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 615 பல்வேறு பணி. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015 மேலும் விவரங்களுக்கு http://www.clw.indianrailways.gov.in/works/uploads/File/ITI%20App.15%20notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். மாநில அரசு துறையில் - 52145 பணியிடங்கள்
* தமிழக சுகாதாரத் துறையில் 89 காலிப் பணியிடங்கள் சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேவாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு. முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சம்பளம் ரூ.9.300 - ரூ34,800- ரூ.4,700 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2015 மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* அரியானா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 288 இளநிலை பொறியாளர் பணி. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hpgcl.gov.in/userfiles/file/FINAL%20ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* அரியானா மாநிலத்தில் 18229 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரியானா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர், பொறியாளர், செவிலியர் போன்ற 18299 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணி அரசு துறையில் காலியாக உள்ள 74 முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bssc.bih.nic.in/Advertisement/forensic_31-07-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* தில்லி மாநகராட்சி சுகாதாரத்துறையில் 93 பணியிடங்கள் தில்லி மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள 93 Junior, Senior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2015 மேலும் கல்வித்தகு, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://111.93.49.24/recruitment/control/portalView என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* ஒடிசா கூட்டுறவு துறையில் 130 ஆய்வாளர் பணி ஒடிசா கூட்டுறவு துறையில் நிரப்பப்பட உள்ள 130 Inspector of Cooperative Societies பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒடிசா பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2015 மேலும் வயதுவரம்பு, தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.odishassc.in/pdf/Advt%20inspect%20of%20co-operative.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* மேற்கு வங்க அரசின் சுகாதார துறையில் நிரப்பப்பட உள்ள 60 Block Asha Facilitator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சமூகவியல், எம்பிஏ, எம்எஸ்டபிள்யூ, பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bardhaman.nic.in/employment/recru_cmoh_566_280715.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* வனத்துறையில் 1800 பணியிடங்கள் ராஜாஸ்தான் மாநில வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 1800 வன காப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rajforest.nic.in/writereaddata/image41/Vacant_Posts_Information_reg._New_Created_Forest_Guard.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையில் 1148 பணியிடங்கள் ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையில் நிரப்பப்பட உள்ள 1148 நர்சரி ஆசிரியர் பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.wcd.rajasthan.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* ஆரம்ப கல்வி இயக்குநரகத்தில் 30522 பணியிடங்கள் ராஜஸ்தான் மாநில ஆரம்ப கல்வி இயக்குநரகத்தில் நிரப்பப்பட உள்ள 30522 vidyalaya sahayak பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://vs.rajashiksha.rajasthan.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். மத்திய அரசு துறைகளில் 6842 பணியிடங்கள்
* நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொது மேலாளர் பணிகள் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 41 பொது மேலாளர், துணை பொது மேலாளர், கூடுதல் முதன்மை மேலாளர், கூடுதல் துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2015 மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதி, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nlcindia.com/careers/advt_no_05_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் 1003 சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளஸ் 2, கணியில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mphc.gov.in/pdf/Advertisement%20AG-3_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* நேஷனல் ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் விஞ்ஞானி பணிகள் பெங்களூரில் செயல்பட்டு வரும் நே,னல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரியில் விஞ்ஞானியாக பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மெக்கானிக், மானுபாக்ச்சரிங், டிசைன் என்ஜினீயரிங் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nal.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* ONGC நிறுவனத்தில் 77 உதவி டெக்னீசியன், உதவியாளர் பணி ONGC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 77 உதவி டெக்னீசியன், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1000 இளநிலை பொறியாளர் பணி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி I - 07.08.2015, பகுதி II - 10.08.2015 மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://vacancycollection.nic.in/ssc/notice/examnotice/final_Notice_JE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் 283 கிளார்க் பணி பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 283 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2015 மேலும் முழுமையான வவிரங்கள் அறிய http://highcourtchd.gov.in/sub_pages/left_menu/recruitments/staff/openings_pdf/Clerk_trs14072015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* தேசிய உரத் தொழிற்சாலையில் இளநிலை பொறியியல் உதவியாளர் பணி இந்திய அரசின் கீழ் பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 35 இளநிலை பொறியியல் உதவியாளர் கிரேடு II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2015 மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
* பெல் நிறுவனத்தில் 15 பொறியாளர் பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்(BEL) நிரப்பப்பட உள்ள 15 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எல்க்ட்ரானிக்ஸ், இஇசி துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/ad%20for%20website.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.