WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 26, 2015

கல்வித்துறையில் பாரபட்ச நடவடிக்கை.

துவக்க கல்வித்துறையில் பாரபட்சமான நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

இதில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறையில் ஒரு தலை பட்சம், பாரபட்சமான நடவடிக்கை போன்றவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் போன்றோரின் நிர்வாக ரீதியான பணிகள் என்ன என்பதை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையின் போது தெளிவுப்படுத்திட வேண்டும்.

தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2013-14, 2014-15ம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.