WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 7, 2015

விரிவுரையாளர் தேர்வு முடிவு.

அரசு சட்டக் கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு
பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் தேர்வானோர் பட்டியல், மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன் விவரங்களை, http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.