WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 18, 2015

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின்
ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர, முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர, இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப் படுகிறது.தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, ஏழு ஆண்டுக்கு இந்தச் சான்றிதழ் செல்லும். நடப்பு ஆண்டின் முதல் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இரண்டாவது தேர்வு வரும், 20ம் தேதி நடக்கிறது. சி.பி.எஸ்.இ., அறிவிப்புநாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், 77 மையங்களிலும், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்தாள் பிற்பகல், 2:30 மணி முதல், 4 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை, 9:30 மணி முதல் நண்பகல், 12மணி வரையிலும் நடக்கும்.தேர்வு துவங்குவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் வந்து விட வேண்டும்; தேர்வு எழுதுவதற்காக நீல மை பேனா வழங்கப்படும்; கணினி வழி ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்டும்; தேர்வர்கள் தங்களுடன் பேனா உட்பட, எந்தப் பொருளும் கொண்டு வரக் கூடாது; தேர்வு நேரம் முடிவதற்கு முன், வெளியில் செல்லவும் அனுமதியில்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.