இந்தியா உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம்.வளரும் நாடுகளிலே முதல் இடம் என உள்ளது.ஆனால் உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பல்கலை கழகங்கள் ஒன்று கூட உலக பல்கலை கழக தரப் பட்டியலில் 200 இடத்திற்குள் இல்லை.ஆனால் மத்திய அரசு கோடிக்கணக்கில் இதற்கு நிதி ஒதுக்குகிறது.ஆனாலும் பலனில்லை .இது ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.இதற்கான முக்கிய காரணம் மத்திய அரசின் MHRD மற்றும் UGC பின்பற்றும் சில விதிமுறைகள் தான் என புலம்புகின்றனர் . கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் சம்பளம் 125000 க்கும் மேல் உள்ளது. ஆனால் அது போன்ற கல்லூரி பேராசிரியர் பணிக்கு முன்னுரிமை Ph.D முடித்தவர்களுக்கு தான் அதிக முன்னுரிமை என தற்போதைய தமிழக அரசும் முந்தைய தமிழக அரசும் கூறிக்கொண்டு TRB யின் மூலம் தேர்வுச் செய்கிறது.
M.Sc உடன் SET/NET முடிக்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்குகிறது. ஆனால் M.Sc உடன் Ph.D முடித்தால் 9 மதிப்பெண்ணாம் .ஏன் அதிகபட்ச தகுதி உடையவர்களாக Ph.D படிப்பு முடித்தவர்களை கருத காரணம் என்ன என செட்/ நெட் முடித்தவர்கள் புலம்புகிறார்கள்.சரி M.Sc படிச்சிட்டு SET/NET EXAM தேர்ச்சி அடைந்தவர்கள் Ph.D முடித்தாலும் 9 மதிப்பெண்கள் தான் வழங்குகிறார்களாம். M.Sc படிச்சிட்டு M.Phil படிச்சிட்டு SET/NET EXAM தேர்ச்சி அடைந்தவர்கள் Ph.D முடித்தாலும் 9 மதிப்பெண்கள் தானாம் . இதிலிருந்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவர்கள் செட்/நெட் தேர்ச்சிப் பெற்றால் கூட Ph.D படிச்சா தான் அரசு கலைக் கல்லூரியில் job vanga mudium . ஆனால் Ph.D படிக்கறவங்க செட்/நெட் முடிக்க வேண்டிய அவசியம இல்லை . ஏனெனில் தமிழக TRB வைத்துள்ள மதிப்பெண்கள் முறை தான் அப்படி இருக்கு. இது போன்று எல்லா மாநிலங்களும் பின்பற்றினால் இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களை உலக தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் தான் காண முடியும் என செட் /நெட் முடித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sunday, October 11, 2015
இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்கள் ஒன்று கூட உலக தரவரிசைப் பட்டியலில் 200 இடத்திற்குள் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.