சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் தேவையற்ற
போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்ற கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வுக்கு முன், பல கல்லுாரிகளில் மாதிரித் தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான போராட்டம், பஸ் டே, கல்லுாரி மாணவர்களிடையே மோதல், பேருந்தில் தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரி கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது.
அதேபோல், வேலை நாட்களில், 75 சதவீத நாட்கள் கல்லுாரிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என, கல்லுாரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.