கல்வித்தகுதி அறிவியல்:
* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
பொறியியல்:
* இரண்டாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
மருத்துவம்:
* இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
எண்ணிக்கை:
அறிவியல்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை
பொறியியல்: 25 வரை
மருத்துவம்: 25 வரை
காலம்:
அறிவியல்: பிளஸ் 1 வகுப்பு/எம்.எஸ்சி., படிப்பு வரையிலானவை
பொறியியல்: மூன்றாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., முதல் எம்.இ.,/எம்.டெக்., முடிக்கும் வரை
மருத்துவம்: மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., முதல் இப்படிப்பை முடிக்கும் வரை
மதிப்பு:
அறிவியல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - மாதம் 4000/- ரூபாய்;
இளநிலை : மாதம் 5000/- ரூபாய்
முதுநிலை - மாதம் 7000/- ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்ப படிவத்தில் ஆசிரியரின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு முறை: அறிவியல் பிரிவில் திறன்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொறியியல் மற்றும் மருத்துவ பிரிவில் ஆராய்ச்சி திட்ட செயல்பாடு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும். உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய தேசிய அறிவியல் அகடமி
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.