WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 12, 2015

'குரூப் - 2ஏ' தேர்வு: அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின்
செயலர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் - 2ஏ பிரிவில், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில், காலியாகவுள்ள, 1,863 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து, அக்., 12லும், பின், 84 கூடுதல் பணியிடங்களுக்கு, அக்., 20லும் அறிவிப்பு வெளியானது. 'இத்தேர்வுக்கு, நவ., 11 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆன்லைனில்' நிரந்தர பதிவு அவசியம் என்பதால், நிரந்தர பதிவு முடித்து, பதிவுக்கட்டணம் செலுத்திய பிறகே, தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க முடியும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி, நவ., 18 வரையிலும், தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நவ., 20 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பழைய முறைப்படி நிரந்தர பதிவு செய்தோர், அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும், 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, புதிய முறை நிரந்தர பதிவில், தங்களின் சுய விவர பக்கத்தை ஏற்படுத்திய பின், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள், தாலுகா அலுவலகங்களில் உள்ள, பொது இ - சேவை மையங்களில், நிரந்தர பதிவு செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.