WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 23, 2015

வனவர் பணி தேர்வு 'கட் - ஆப்' வெளியாகுமா?

தமிழக வனத் துறையில், 165 வனவர் மற்றும், 16 களப்பணியாளர்
பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், வனத்துறையின், www.forests.tn.nic.in இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது.ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு எத்தனை பேர் அழைக்கப்படுவர், 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, தேர்வு எழுதிய சிலர் கூறியதாவது: தேர்வில் மொத்த மதிப்பெண், 250. தற்போது, 200க்கு மாற்றப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், இறுதிப் பட்டியல் தான் வெளியிடப்படுகிறது. 'கட் - ஆப்' மதிப்பெண்கள் வெளியிடுவதில்லை. வனத்துறையாவது ஒளிவுமறைவின்றி, 'கட் - ஆப்' வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.