WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 27, 2015

ஏர்டெல் நிறுவன அலைபேசி கட்டணம் திடீர் உயர்வு.

ஏர்டெல் நிறுவனத்தின், 'பிரீ பெய்டு' எனப்படும், முன்கூட்டியே பணம் செலுத்தி
சேவை பெறும் திட்டத்திற்கான கட்டணம் மற்றும் 'மொபைல் இன்டர்நெட்' கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின், 300 ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான, 'புல் டாக் டைம்' ரீசார்ஜ் சேவை தவிர, இதர பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும், '3ஜி' இணைய வசதி அளிக்கும் திட்டங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது; சிலவற்றின் வேலிடிட்டி டைம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மத்திய அரசு, சேவை வரியை, 14 சதவீதத்திலிருந்து, 14.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.