பள்ளிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனி பணியாளர்கள் நியமனம்
செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகரில் நடந்த சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு சீனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவராக கணேசன், பொருளாளராக மோகன், அமைப்பு செயலாளராக ஜெயராஜ் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பள்ளிகளில் காவலர்கள் இல்லாததால் இலவச லேப் டாப்பை பொது இடத்தில் வைத்து மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தால் திருட்டு தடுக்க முடியும். கல்வி பணியுடன் சாதி சான்றிதழ், ஆதார் எண் உட்பட பல்வேறு செய்ய வேணடியுள்ளதால் கல்வி பணியை முழுமையாக செய்ய முடியாத நிலை உள்ளது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.