கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், 1977-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று முழு நிலவு தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இவ்வாறாக டிசம்பர் 25-ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்ற அழைப்பது வழக்கமென்றும் அதற்குக் காரணம் குளிர்காலத்தின் துவக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே என்றும் நாசா விளக்கியுள்ளது. இதன் பின்னர் 2034-ல் தான் மீண்டும் டிசம்பர் 25-ல் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று முழு நிலவு தோன்றும் என்றும் நாசா கணித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.