WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 3, 2015

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை: சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள்
உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, என பொருளாதாரம், புள்ளியியல், சட்டம், சி.ஏ, சிவில், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 115 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணபங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600யும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு சிண்டிகேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.