WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 9, 2015

FLASH NEWS: சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு 13-ம்தேதி வரை விடுமுறை.

                                            சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு 13-ம்தேதி வரை விடுமுறை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை பதம் பார்த்த வடகிழக்கு பருவமழை சற்று தணிந்துள்ளதால், சுமார் ஒரு மாதகாலமாக பள்ளி-கல்லூரிகள் இயங்கவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூ உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

எனினும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9-ம்தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி பல்வேறு பகுதிகளில் நிறைவடையாததாலும், இன்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும், பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.