WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 20, 2016

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.

தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட
வேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள், மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன. இதை ஆய்வு செய்த அரசு, எல்காட் நிறுவனம் மூலம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவன ஊழியர்கள் மாவட்டம் தோறும் சென்று, முதற் கட்டமாக இந்தாண்டு லேப்டாப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், லேப்டாப்களில் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணி இன்று துவங்குகிறது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இப்பணி நடைபெறும். விடுபட்ட மாணவ, மாணவிகளும் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியர் சொல்லும் நாட்களில் லேப்டாப்பை எடுத்து வர வேண்டும். வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.