WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 21, 2016

தகுதி தேர்வை நீக்க வலியுறுத்தி ஆசிரியர் இயக்கம் மனித சங்கிலி.


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க கோரி மனித சங்கிலி போராட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே நடந்த மனித சங்கிலி போராட்டத் திற்கு
தொடக்க, நடுநிலை பள்ளி மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தரமூர்த்தி, அமைப்பு செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினர். ஆறாவது ஊதியக்குழுவில், தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை நீக்கி, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது. புதிய பஸ் நிலையத்திலிருந்து நான்கு முனை சிக்னல் வரை நடந்த, மனித சங்கிலி போராட்டத்தில் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.