WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 20, 2016

ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் தடை.


விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார். தமிழகம்,
புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 2,000 ஆசிரியர்கள் வரை பணியில் ஈடுபடுவர். ஆசிரியர் சங்கங்கள், தங்களின் சாதனை, கோரிக்-கை குறித்த, 'நோட்-டீஸ்' வழங்கி, காலை நேரத்தில் வாயிற்கூட்டம் நடத்துவது வழக்கம். தற்போது வாயிற்கூட்டம் நடத்துவதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாயிற்கூட்டங்களில், கட்சிகளுக்கு ஆதரவு நிலை குறித்து பேசும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, இது தவறாகும். வாயிற்கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.