WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 15, 2016

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச நிலம்; அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவு.

பள்ளிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் மீது, அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளி நிர்வாக சங்கத்தின் செயலர் ஜோசப் சுந்தர்ராஜ், தாக்கல் செய்த மனு:

பேராசிரியர் சிட்டிபாபு கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படி,பள்ளிகளில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேணடும் என, 2004ல், பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. மாநகராட்சி என்றால், ஆறு கிரவுண்டு; மாவட்ட தலைநகரம் என்றால்,எட்டு கிரவுண்டு; நகராட்சி, 10 கிரவுண்டு; டவுன்ஷிப், ஒரு ஏக்கர், கிராமப்புறம் என்றால், மூன்று ஏக்கர் நிலம், குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டது. இந்த உத்தரவு வருவதற்கு முன்,துவக்கப்பட்ட பள்ளிகளை பொறுத்தவரை, குறைந்தபட்ச நிலம் இருப்பது சாத்தியமற்றது. 

இந்த பிரச்னை குறித்து ஆராய, ஒரு குழுவை அரசு அமைத்தது. பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரை உறுப்பினர் செயலராக கொண்டு,உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, அரசுக்கு பரிந்துரையை அளித்தது. இந்நிலையில், 746 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறைந்தபட்ச நிலத்தை வைத்திருக்கவில்லை எனக் கூறி, 2016, மே மாதம் வரை, தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறைந்தபட்ச நிலம் தொடர்பாக, மாநில அரசு, இறுதி முடிவை இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அளித்த அவகாசம், மே மாதம் முடிகிறது. 746 பள்ளிகளிலும், 5.25லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இம்மனு, நீதிபதி சுப்பையா முன், விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். குழுவின் பரிந்துரை அடிப்படையில், அரசு எடுத்த முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்., 18ம் தேதிக்கு, நீதிபதி சுப்பையா தள்ளிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.