WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 26, 2016

காரைக்குடியில் நடக்கிறது பி.இ. 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கை ஜூன் 29ல் கவுன்சலிங் தொடக்கம்.

தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி ஜூலை 9 வரை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வரும், சேர்க்கை செயலாளருமான ராஜ்குமார் கூறியதாவது: பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 14 ஆயிரத்து 785 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், தகுதியான அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கவுன்சலிங் வரும் மாணவர்களுக்கு, காரைக்குடி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் இணையதளம் ஷ்ஷ்ஷ்.ணீநீநீமீtறீமீணீ.நீஷீனீ-ல் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிசனல் அல்லது டிப்ளமோ சான்று, பி.எஸ்.சி பட்டதாரிகள் தங்களது டிகிரி சான்று, சாதி சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும். படிவங்களோடு டி.டி அனுப்பாதவர்கள் கவுன்சலிங் வரும்போது கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.