பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்
தயாரிப்பதை
தடுக்கும் வகையில், பார்கோடு குறியீட்டுடன் நிரந்தர பதிவு எண் கொண்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2015ல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் பச்சை நிறத்தில் இருந்தன. தற்போது சிவப்பு நிற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல் பதிவு எண், வரிசை எண் மாற்றப்பட்டு நிரந்தர பதிவு எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர பதிவு எண் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம்பெறும்.
அதே போல் இந்த மதிப்பெண் சான்றிதழில் இரண்டு வகையான பார்கோடுகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினருக்கு பச்சை நிறத்தினாலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சலுகைகள் பெற வசதியாக சான்றிதழில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினர் என, குறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.