ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு இந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து,
இரண்டு ஆண்டாக
மாற்றப்பட்டு உள்ளது.
முதலாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, பல்கலை வெளியிட்டது. அதில், ஜூன், 18ம் தேதி துவங்கும் தேர்வுகள், ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த போவதாக அறிவித்துள்ளது.
இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பல்கலை பதிவாளர் கலை செல்வன், தேர்வு
அட்டவணை குறித்த வெளியிட்ட விளக்கம்:
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள், ஆண்டுக்கு, 200 நாட்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு, பி.எட்., படிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததால், கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்க தாமதமானது. ஜூன், 16ம் தேதியுடன், 200 நாட்கள் முடிவதால், அதன்பின், வார இறுதி நாட்களில் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும், வழக்கம் போல் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.